அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை

  சனிப்பெயர்ச்சி 2025 மார்ச் 30 இரவு 9.41 மணிக்கு சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .  2027 ஜுன் 3 ஆம் தேதி வரை...

12 ராசிகளுக்கான தமிழ் மந்திரங்கள் மற்றும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள்



ஒவ்வொருவருக்கும் இறை அருள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பல்வேறு வழிபாடு செய்து வழிபடும் நாம், தினமும் எந்தெந்த ராசியினர் கீழே குறிப்பிட்டுள்ள தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரத்தை பாராயணம் செய்து இறைவனின் நல்லருள் பெற்றிடுங்கள்.இந்த மந்திரங்கள் ராசி அதிபதியை அடிப்படையாக கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதால், உங்கள் ராசிக்கான கூடுதல் பலன் கிடைக்கும் வகையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் இறை அருள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பல்வேறு வழிபாடு செய்து வழிபடும் நாம், தினமும் எந்தெந்த ராசியினர் கீழே குறிப்பிட்டுள்ள தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரத்தை பாராயணம் செய்து இறைவனின் நல்லருள் பெற்றிடுங்கள். இந்த மந்திரங்கள் ராசி அதிபதியை அடிப்படையாக கொண்டு கொடுக்கப்பட்டுள்ளதால், உங்கள் ராசிக்கான கூடுதல் பலன் கிடைக்கும் வகையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான மந்திரம் 
 மேஷம் ராசிக்கான மந்திரம்: விநாயகர் துதி ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை… நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக ! விரைகழல் சரணே ! மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழே இருக்கும் முருகன் ஸ்லோகத்தை தினமும் 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய உங்களின் துன்பங்கள் பறந்தோடும். 
 ஷண்முகம் பார்வதீ புத்ரம் க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத் மஜம் 
 ரிஷபம் ராசிக்கான மந்திரம் முருகன் துதி பேர் ஆதரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா! சேரா நிருதர் குல கலகா! சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த் தேவா ! தேவர் சிறைமீட்ட செல்வா ! என்று உன் திருமுகத்தைப் பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர் பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா ! வா, வா, என்று உன்னைப் போற்றப் பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால் வாராது இருக்க வழக்கு உண்டோ ! வடிவேல் முருகா ! வருகவே ! வளரும் களபக் குரும்பை முலை வள்ளி கணவா ! வருகவே ! ரிஷப ராசியினர் வெள்ளிக்கிழமை விரதம் இருந்தும், மகாலட்சுமி பூஜை செய்தும் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை 11 முறை தினமும் கூற செல்வங்கள் பெருகும். 
 ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ 
 மிதுனம் ராசிக்கான மந்திரம் பெருமாள் துதி திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று ! தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவு மொன்றாய் இசைந்து ! மிதுன ராசியினர் மகா விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை 54 முறை கூறி வர பல்வேறு நன்மைகள் நடக்கும். 
 ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: 
 கடகம் ராசிக்கான மந்திரம் நரசிம்மர் துதி : அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன் அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன் தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன் துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன் மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன் ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன் வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன் பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் ! கடக ராசியில் பிறந்தவர்கள் பெளர்ணமி தோறும், அம்பாளுக்கு விரதமிருந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய கீழே உள்ள ஸ்லோகத்தை 21 முறை கூறி வர அனைத்து நல்ல பலன்களும் கிடைக்கும். 
 ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம: 
சிம்மம் ராசிக்கான மந்திரங்கள் சிம்மம் அனுமன் துதி விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே ! கண்டேன் ஒரு சீதையையே கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான் வென்றேன் எனவே விழைந்தானையே நான் கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே ! சரமே தொளையா சகமே மறவா சரீரா அனுமா ஜமதக் கினிநீ உரமே உறவே உறவோய் பெரியோய் உயர்வே அருள்வாய் திருமாருதியே ! சிம்ம ராசியினர் மாதம் ஒரு ஞாயிறு கிழமைகளிலாவது சூரிய சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள சூரிய மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும். 
 ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:  
கன்னி ​ராசிக்கான மந்திரங்கள் கன்னி கோவிந்தன் துதி ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ, வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன், தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே, நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே ! கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் மகா விஷ்ணு சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்வது நல்லது. கீழே உள்ள பாராயணம் செய்தல் நல்லது. 
 ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம: 
துலாம் ராசிக்கான மந்திரங்கள் ராகவேந்திரர் துதி நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம் நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம் பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம் பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம் கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம் காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம் வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம் மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் ! துலா ராசியினர் பெளர்ணமி நாளில் விரதமிருந்து சத்யநாராயண பூஜை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும். 
 ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம: 
விருச்சிகம்ராசிக்கான மந்திரங்கள் சிவ துதி நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான் நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும் ஊருளான் எனதுரை தனதுரையாக ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன் பாருளார் பாடலோ டாடல் அறாத பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும் ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே ! செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச் செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே ! விருச்சிக ராசியினர் செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து துர்க்கை அம்மனை பூஜை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும். 
 தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம் 
தனுசு ராசிக்கான மந்திரங்கள் தனுசு ராசிக்கான மந்திரங்கள் துர்க்கை துதி இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே, விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே, திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே, அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே ! தனுசு ராசியினர் வியாழக் கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு சகல நன்மைகளும் கிடைக்கும். 
 ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம: 
மகரம் ராசிக்கான மந்திரங்கள் துர்க்கை துதி சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன் வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன் முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன். சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன் பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன் சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன் கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன் மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன் கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன் அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன் மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் ! மகர ராசியினர் சனி கிழமைகளில் விரதமிருந்து சனீஸ்வர பகவானுக்கு பூஜை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு சகல நன்மைகளும் கிடைக்கும். வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும். 
 ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம: ​
கும்பம் ராசிக்கான மந்திரங்கள் சிவன் துதி ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி ! மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே ! கும்ப ராசியினர் சனி கிழமைகளில் விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு பூஜை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு சகல நன்மைகளும் கிடைக்கும். 
 ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம: ​
மீனம் ராசிக்கான மந்திரங்கள் ஸ்ரீரங்கநாதர் துதி பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே ! வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும், பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே ! ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன் ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே ! மீன ராசியினர் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபடுவது அவசியம். கீழே உள்ள மந்திரத்தை பாராயணம் செய்வதால் பல்வேறு சகல நன்மைகளும் கிடைக்கும். 

 ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

No comments:

Post a Comment