சனிப்பெயர்ச்சி
2025 மார்ச் 30 இரவு 9.41 மணிக்கு சனிபகவான்
கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் . 2027 ஜுன் 3 ஆம் தேதி வரை மீனத்தில்
இருப்பார் . இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை, மற்றும் எந்தெந்த ராசிகளுக்கு தொந்தரவு தரும் இந்த சனி
பெயர்ச்சி என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் ! தன்னுடைய சொந்த வீடான கும்பத்தில்
இருந்து குருவினுடைய வீட்டிற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் ! மீனம் என்பது நீர்
ராசியாகும் . வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களை குறிக்கும் ராசியாகும் .
அயன சயன போக ஸ்தானம், கட்டில் ஸ்தானம், விரைய ஸ்தானம் , கால புருஷ தத்துவப்படி இது பன்னிரெண்டாவது வீடும் ஆகும் .
எனவே மேற் சொன்ன விஷயங்களில் சனி பகவான் தாக்கத்தை ஏற்படுத்துவார் . இந்தத் தாக்கம் எந்த ராசிக்கு பலம், எந்த ராசிக்கு பலவீனம் தெளிவாக இப்பொழுது 12 ராசிகளுக்கும் பார்க்கலாம் !
மேஷ ராசி சனி
பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
வீர தீர செயல்களில் சாதிக்கும் மேஷ ராசி நேயர்களே ! உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில்
இருந்த சனி பகவான் இப்பொழுது பன்னிரண்டாம் இடத்தில் வருகிறார் . அடுத்த ஏழரை
வருடம் உங்களுக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கும் . அதாவது 2025 மார்ச் முதல் 2027 ஜூன் வரை .
உங்களுக்கு
ஏழரை சனி ஆரம்பம் . 2025 மார்ச் முதல் கவனமாக இருக்க வேண்டும் . வீண் வம்பு வழக்கு
தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம் . பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
கவனமாக இருக்க வேண்டும் .
கவனம்
செலுத்த வேண்டும்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த
வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். . இந்த ஏழரை சனியில்
திருமணம் செய்யலாம். ஆனால் வீடு வாகன யோகம் மட்டும் உடனே ஏற்படாது. வீடு கட்ட
விருப்பம் உள்ளவர்கள் உங்கள் சுய ஜாதகத்தை பார்த்து முடிவு செய்யுங்கள் . உற்றார்
உறவினர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படும் . எனவே வீண் பேச்சுகள் விவாதங்களை இந்த
காலகட்டங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும் .
புதிதாக
தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள்
புதிதாக
தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் கவனமோடு செயல்பட வேண்டும் . உங்கள் ஜாதகத்தை
ஒரு முறை ஜோதிடர் இடத்தில் கொடுத்து பார்த்து தொழிலை ஆரம்பியுங்கள் . உங்கள் சுய
ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் ஒரு சில நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்க
ஆரம்பிக்கும் . எனவே புதிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவதற்கு முன்னர் ஜாதகம்
பார்த்து செயல்படுங்கள் .
ரிஷப ராசி சனி
பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
உங்கள்
காட்டில் நல்ல மழை தான்
நிர்வாக திறமை உடைய ரிஷப ராசி நேயர்களே ! உங்கள் ராசிக்கு
பத்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் 2025 மார்ச் முதல் 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
பதினோராம் இடத்து சனிபகவான் உங்களுக்கு நல்ல அனுகூலங்களை கொடுக்கப் போகிறார் .
அடுத்த இரண்டரை வருடம் உங்கள் காட்டில் நல்ல மழை தான் . இந்த காலகட்டத்தில்
நீங்கள் சாதிக்க நினைத்த அத்தனை விஷயத்தையும் செயல்படுத்த ஆரம்பியுங்கள் .
சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க வேண்டும்.
இருப்பினும் சுய ஜாதகத்தில் தசா புத்தி
நன்றாக இருக்க வேண்டும். எனவே எந்த ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்னர் என்னிடம்
உங்கள் ஜாதகத்தை கொடுத்து பார்த்து விட்டு ஆரம்பியுங்கள். திருமணம் ஆகாதவர்ளுக்கு திருமணம் நடக்கும் . குழந்தை
பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இது அருமையான காலகட்டம் . குழந்தை பாக்கியம் ஏற்படும் . புதிதாக தொழில்
ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இது அருமையான காலகட்டம் . போட்டு
வைத்த திட்டங்கள் அனைத்தும் செயல்படக்கூடிய காலகட்டம் இதுவாகும் .
வேலை
கிடைக்கும் | வெற்றி
மேல் வெற்றிதான்
வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை
கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது கூடுதல்
மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலையில் பதவி
உயர்வு கிடைக்கும் . இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருக்க
வேண்டும்.
இனி
தொட்டதெல்லாம் வெற்றியில் தான் முடியும் . இந்த இரண்டரை வருட காலகட்டத்தை சரியாகப்
பயன்படுத்துங்கள், விடாமுயற்சியோடு
செயல்படுங்கள் . நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், அந்த வயதிற்கு உண்டான விஷயங்கள்
உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும் . எனவே 2025 மார்ச் முதல் 2027 ஜூன் வரை உங்களுக்கு நல்ல நேரமே .
இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தியும் நன்றாக இருந்தால் வெற்றி மேல் வெற்றிதான்
மிதுன ராசி சனி
பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
புத்தி கூர்மை உடைய மிதுன ராசி நேயர்களே ! உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில்
இருந்த சனி பகவான் 2025 மார்ச் மாதம் முதல் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாக
போகிறார் . இந்தப் பத்தாம் இடத்து சனி பகவான் உங்களுக்கு, தொழில் வேலை
உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் 60 சதவீதம் நன்மை தரப்போகிறார் . திருமணம் ஆகாதவர்களுக்கு கடுமையான முயற்சியின்
பெயரில் திருமணம் நடக்கும் . குழந்தை பாக்கிய அனுகூலம் உண்டு. வீடு கட்ட
நினைப்பவர்கள் சற்று காத்திருந்து செயல்படுத்துங்கள் . அல்லது என்னிடம் உங்கள்
ஜாதகத்தை பார்த்து செயல்படுங்கள் .
பணம்
கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
கவனமாக இருக்க வேண்டும் . தேவையில்லாமல் வெளியில் கடன் வாங்க வேண்டாம். இருக்கும்
வருமானத்தைக் கொண்டு உங்கள் பொருளாதாரத்தை திட்டமிட்டு செயல்படுங்கள் .
மாணவர்களுக்கு 60% நன்மை உண்டு . வயதானவர்கள் தங்களுடைய உடல் நலத்தில் கவனம்
செலுத்த வேண்டும் . மொத்தத்தில் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு 60% நன்மைகள் உண்டு .
உங்கள் சுய ஜாதகத்திலும் தசா புத்தி நன்றாக இருந்தால் கூடுதல் நன்மைகள் உங்களுக்கு
நடக்கும்
கடகம் ராசி சனி
பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
அஷ்டம
சனியில் இருந்து விடுதலை
அன்பும் கருணையும் கொண்ட கடக ராசி நேயர்களே ! உங்களுக்கு கடந்த
இரண்டரை வருட காலம் அஷ்டம சனியாக இருந்தது . அதிலிருந்து மீண்டு வரப் போகிறீர்கள்.
நீங்கள் மனதில் நினைத்த விஷயங்கள் மற்றும் செயல்படாத சில விஷயங்கள் இப்பொழுது
நடக்கப் போகிறது !, இதுவரை
உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் அஷ்டம சனியாக இருந்த சனி பகவான் இப்பொழுது
ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ச்சி
ஆகிறார். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு மத்திமமான பலன்களை கொடுக்கும் .
60% நன்மைகள்
உண்டு
திருமணம் ஆகாதவர்களுக்கு உங்களுடைய சுய
ஜாதகத்தில், தசா
புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே திருமணம் நடக்கும் திருமணம் கைகூடும்.
சொந்தமாக தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று யோசித்து
ஆரம்பிங்கள் . வேலைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் .
இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் . குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு
குழந்தை பாக்கியம் ஏற்படும் .
வீடு வாகன யோகம் அமையும்
வீடு கட்ட முடியவில்லை என்று
நினைத்தவர்களுக்கு சொந்தமாக வீடு வாகன யோகம் அமையும். வீடு கட்ட ஆரம்பிக்க
போகிறீர்கள் . உங்கள் வேலையில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ப பதவி உயர்வு
கிடைக்கும் வருமானம் உயரும் . படிப்பில் இதுவரை கவனம் செலுத்த முடியாமல் இருந்த
மாணவர்கள், இப்பொழுது
படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல தேர்ச்சி
பெறுவீர்கள் ! வயதானவர்களுக்கு இதுவரை உடல் உபாதைகள் அதிகம் கொடுத்து கொண்டு
வந்தது இனிமேல் படிப்படியாக உடல் நலம் சீராகும் .
சுய
ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால்
தொழில் செய்வதாக இருந்தாலும் , வீடு கட்ட
ஆரம்பிப்பதாக இருந்தாலும், எந்த ஒரு முக்கியமான விஷயங்கள் செய்வதாக இருந்தாலும், உங்கள் சுய
ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் நீங்கள் நினைத்த விஷயங்கள் நல்ல விதமாக
நடக்கும் .
சிம்ம ராசி சனி
பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
கண்டக
சனி முடிகிறது அஷ்டம சனி ஆரம்பிக்கிறது
நேர்மை குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே
! சனி பகவான் கும்ப ராசியிலிருந்து
மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . 2025 மார்ச் வரை உங்களுக்கு கண்டக சனி நடைபெறும் .
அதன் பிறகு உங்களுக்கு அஷ்டம சனி ஆரம்பம் ! இந்த அஷ்டம சனி காலம் உங்களுக்கு சற்று
கஷ்ட காலமாகத் தான் இருக்கும் . இஷ்ட தெய்வத்தை வழிபடுவதன் மூலம் கஷ்ட காலத்தை
கடந்து விடலாம் . இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கடுமையான முயற்சியின் பேரில்
திருமணம் நடக்கும் . தொழில் உத்தியோக வழி மேன்மையில் நிதான போக்கை கடைபிடிக்க
வேண்டும் .
புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள்
புதிய தொழில் செய்ய ஆரம்பிக்க இருப்பதாக
இருந்தால் இந்த காலகட்டத்தில் ஒத்தி போட வேண்டும் . புதிதாக வீடு கட்ட
ஆரம்பிப்பவர்களும் இரண்டு வருடம் கழித்து ஆரம்பிக்க வேண்டும் . அல்லது உங்கள் சுய
ஜாதகத்தை என்னிடம் கொடுத்து, நல்ல தசா புத்தி நடைபெற்றால் நல்ல சுப விஷயங்களை நீங்கள்
ஆரம்பித்து வெற்றிகரமாக செய்து முடிக்கலாம் . அதற்கு ஜாதகம் வழி விடுகிறதா என்பதை
பார்த்துவிட்டு நான் உங்களுக்கு சொல்லுகிறேன் . தொலைபேசி வழி ஜாதக பலன் கூறப்படும்
தொடர்புக்கு ph : 97 42 88 64 88.
கடுமையான சோதனை
திருமணம் ஆனவர்களுக்கு இது ஒரு கடுமையான
சோதனை காலகட்டமாக இருக்கும் . இருப்பினும் நீங்கள் சிம்ம ராசி என்பதால் .. அஞ்சா
நெஞ்சத்தோடு நேர்மையோடு இருந்தால் எல்லா விஷயத்தையும் நீங்கள் கடந்து சாதிக்க
முடியும் . உங்கள் நல்ல குண இயல்பை எப்பொழுதும் பின்பற்றுங்கள் . ஆனால்
யாருக்காகவும் நல்ல விஷயங்களை விட்டுக் கொடுக்காதீர்கள் . அதேசமயம் பாதுகாப்பு
உணர்வோடு செயல்படுங்கள் .
யாரிடமும்
வீண்வம்பு இந்த காலகட்டத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் உங்களை வீண்
வம்புக்கு இழுப்பார்கள் . உங்கள் வளர்ச்சியில் பொறாமைப் படுவார்கள் . எல்லாம்
ஆண்டவன் செயல் என்று உங்கள் வேலையில் தொழிலில் கவனத்தை செலுத்துங்கள் .
சிம்மராசி பெண்களுக்கு
உங்களுக்கு இது சற்று கடுமையான சோதனை
காலகட்டமாக இருக்கும் குடும்பத்தில் சில வீண் பிரச்சனைகள் எட்டிப் பார்த்து பின்பு
சரியாகிவிடும் . புதிய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, என்னிடம் உங்கள்
ஜாதகத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி தொலைபேசி வழி ஜாதகம் பார்த்து எந்த ஒரு புதிய
விஷயத்தையும் முடிவு செய்து ஆரம்பிங்கள் வெற்றி நிச்சயம் .
கண்டக
சனியை நிதானமாக கடந்து செல்லுங்கள்
இந்த கண்டக சனியை நிதானமாக கடந்து
செல்லுங்கள் . எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து செய்யுங்கள் ! கடன் வாங்குவதை
தவிர்க்கவும் . வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்து பொருளாதாரத்தை சரியாக
திட்டமிட்டு செயல்படுங்கள் ! வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் !
கன்னி ராசி சனி
பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
உங்களுக்கு
கண்டக சனி ஆரம்பம்
நுட்பமான சிந்தனை ஆற்றலால் முன்னேறிக்
கொண்டிருக்கும் கன்னி ராசி நேயர்களே
! கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி
பகவான் பெயர்ச்சியாகிறார் . இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்
என்றால் ?
இதுவரை
ஆறாம் இடத்தில் இருந்த சனி பகவான் உங்களுக்கு ஒரு சில நல்ல நன்மைகளை
கொடுத்திருக்கிறார் . இதனை நீங்கள் சரியாக பின்பற்றி இருந்தால் தற்போது நீங்கள்
வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பீர்கள் .
ஒருவேளை
உங்கள் சுய ஜாதகத்தில் தசா புத்தி சரியில்லாத பட்சத்தில் நன்மைகள் உங்களைத் தேடி
வந்திருந்தாலும் சில தடைகளை சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள் . அதாவது
கோச்சாரப்படி சனிபகவான் 2025 மார்ச் வரை உங்களுக்கு நல்ல அனுகூலத்தை கொடுக்கிறார் .
அடுத்து 2025
மார்ச்சுக்கு
பிறகு தான் உங்களுக்கு சோதனை காலகட்டம் ஆரம்பிக்கிறது . இருப்பினும் அச்சம் கொள்ள
வேண்டாம் . உங்கள் ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் தப்பித்து சரியான
வழியில் செயல்படுவீர்கள் .
கண்டக சனியை கடக்க உங்களுக்கு இப்போது நிதானம் தேவை
ஏழாம் இடத்து சனி என்பது கண்டகசனியாகும்
. வீண் வம்பு வழக்குகளில் சிக்க வைத்து தொந்தரவு கொடுக்கும் . எனவே தேவையில்லாத
விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல்.. உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில்
கவனத்தை செலுத்துங்கள் . அப்பொழுதுதான் சில தர்மசங்கடங்களில் இருந்து நீங்கள்
தப்பித்துக் கொள்ளலாம் . 2025 மார்ச்சுக்கு பிறகு சோதனை காலகட்டமாக இருந்தாலும் , எதிரிகளால்
இருந்த தொல்லை தற்போது விலகும் .
எதிரி விலகி விடுவார்கள்
உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்கள்
உங்கள் எதிரி தானாகவே உங்களை விட்டு விலகி விடுவார்கள் . எனவே இந்த கண்டக சனியில்
இந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நடக்கும் . ஆனால் மற்றபடி பொருளாதார நிலையில்
சற்று வீக்கத்தை உங்களுக்கு கொடுக்கும் . எனவே தேவையில்லாமல் கடன் வாங்குவதை
தவிர்க்கவும் .
இருப்பதைக்
கொண்டு சிறப்புடன் வாழ நீங்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய காலகட்டம் இந்த இரண்டரை
வருட கால கட்டமாகும் . 2025 மார்ச் முதல் 2027 ஜூன் வரை நீங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருந்தே ஆக
வேண்டும் . குடும்ப உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து எந்த ஒரு விஷயத்தையும்
செய்து முடிக்க வேண்டும்.
பணம் கொடுக்கல் வாங்கல்
பெரிய
பணத்தொகை கொடுக்கல் வாங்கல் , சொத்து சார்ந்த விஷயங்கள் , இந்த
காலகட்டத்தில் தவிர்க்கவும் . அதாவது கடன் வாங்க கூடாது , யாருக்கும்
கடனும் கொடுக்கக் கூடாது இதை கண்டிப்பாக நீங்கள் இந்த காலகட்டத்தில் கடைபிடித்து
ஆக வேண்டும் .. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பெரிய
போராட்டமாக இருக்கும் . சீக்கிரமாக வரன் அமையாது . உங்கள் சுய ஜாதகத்தில்
தசாபுத்தி நன்றாக இருந்தால் ஓரளவுக்கு திருமண வாய்ப்பு உங்களை தேடி வரும் .
புதிய முயற்சிகளை ஒத்தி போடவும்
ஏற்கனவே செய்து கொண்டிருக்கும்
விஷயத்தில் அதிகப்படியாக கவனம் செலுத்துங்கள் இப்போதைக்கு எந்த மாற்றத்தையும்
கொண்டு வர வேண்டாம் . செய்யும் அந்த விஷயத்தையே தொடர்ந்து செய்யுங்கள் . தொழில் மற்றும் வேலை சார்ந்த
விஷயங்களில் தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும்
வேலை அல்லது உத்தியோகத்தை அல்லது சுய தொழிலை தொடர்ந்து அதே போன்று நடத்தி
செல்லுங்கள் . புதிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் . மாணவர்களுக்கு படிப்பில்
கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் . கடுமையான முயற்சியின் பேரில்தான் நல்ல
மதிப்பெண்களை மாணவர்கள் பெற முடியும் .
வீட்டு
பெரியவர்களின் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு பின்பு சரியாகிவிடும் . மருத்துவ
ஆலோசனை பெறுவது சிறப்பு . அஜாக்கிரதியாக இருந்துவிட வேண்டாம் .
துலாம் ராசி சனி பெயர்ச்சி
பலன்கள் 2025 முதல் 2027 வரை
ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த
சனி பகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் . ஐந்தாம் இடத்தில் இருந்த சனி பகவான் பூர்வீகம் சார்ந்த சில விஷயங்களில்
தொந்தரவு கொடுத்து கொண்டு வந்தார் . தொழில் வேலை விஷயங்களில் லாபமற்ற சூழ்நிலையை
ஏற்படுத்தியிருக்கும் .
உங்கள் ஜென்ம
ராசிக்கு ஆறாம் இடத்திற்கான சனி பெயர்ச்சியானது, நல்ல அனுபவத்தை கொடுக்கும். எந்தெந்த
விஷயங்களில் அனுகூலத்தை கொடுக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
திருமணம்
இதுவரை திருமணம்
ஆகாத துலாம் ராசி நேயர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் தாமதமான
நேயர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும். இதுவரை இருந்த மனக்கசப்பு
விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். சுமூகமான பேச்சு
வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
வேலை
செய்து கொண்டு இருந்த வேலையில் தொந்தரவு
ஏற்பட்டு வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல
வேலை கிடைக்கும். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வேலை சார்ந்த விஷயங்களில்
எல்லாம் இனி உங்களுக்கு சாதகமாக நடக்கப்போகிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு சம்பள
உயர்வு கிடைக்கும். அரசு சார்ந்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.
தொழில்
சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இதுவரை பல
தடைகள் ஏற்பட்டது. இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தடைகள் விலகும். தொழிலாளர்களால்
மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஏற்ற இறக்கத்துடன் சென்று
கொண்டிருந்த தொழில், இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ஒரு சீரான
நிலையில் செல்லும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள்
உங்களுக்கு கைகொடுக்கும். உற்சாகத்துடன் உங்கள் தொழிலில் கவனம் செலுத்துவீர்கள்.
இருப்பினும் சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக
இருக்க வேண்டும். சுய ஜாதகத்தை என்னிடம் ஒருமுறை பார்த்து விட்டு எந்த ஒரு
முடிவையும் நீங்கள் செய்யுங்கள். காரணம் சனி பெயர்ச்சி நன்றாக இருக்கிறது, அதே சமயம் ஜாதக
அமைப்பும் தசா புத்தியும் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும்
தொழிலை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும்.
விருச்சிக ராசி சனி பெயர்ச்சி
பலன்கள் 2025 முதல் 2027 வரை
ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
கும்பத்தில் இருந்து மீனத்திற்கு சனி பகவான்
பெயர் செய்கிறார் . உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனி பகவான், ஐந்தாம்
இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். நான்காம் இடம் என்பது அர்த்தாஷ்டம சனியாகும். இந்த
அமைப்பானது உங்களுக்கு ஏழரை சனிக்கு நிகரான பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தது.
அடுத்து ஐந்தாம் இடத்தில் இருந்து உங்களுக்கு தரக்கூடிய பலன்களை இப்பொழுது
பார்க்கலாம்.
அர்த்தாஷ்டம
சனி விலகுகிறது
கும்பத்தில் இருந்து மீனத்திற்கு சனி பகவான்
பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த சனி பகவான், ஐந்தாம்
இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். நான்காம் இடம் என்பது அர்த்தாஷ்டம சனியாகும். இந்த
அமைப்பானது உங்களுக்கு ஏழரை சனிக்கு நிகரான பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தது.
அடுத்து ஐந்தாம் இடத்தில் இருந்து உங்களுக்கு தரக்கூடிய பலன்களை இப்பொழுது
பார்க்கலாம்.
ஐந்தாம் இடத்து
சனியும் உங்களுக்கு நல்ல அனுகூலம் இல்லை. பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் சில
சங்கடங்கள் தரும். இருப்பினும் பயப்பட வேண்டாம். ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து
நிதானமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் தேவையற்ற வீண் பிரச்சனைகளில்
இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
எதிர்ப்புகள் அதிகரிக்கும். எனவே வீண்
விவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
கவனம் செலுத்துங்கள். அதாவது பணம் யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது. அதேபோல் பணம்
யாரிடம் இருந்தும் இந்த காலகட்டத்தில் கடன் வாங்க கூடாது.
தொழில்
தொழிலில் எந்தவித புதிய முயற்சிகளையும் செய்ய
வேண்டாம். அதாவது ஏற்கனவே உங்கள் தொழிலில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ, அதையே
பின்பற்றுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடும் போது கவனம் தேவை.
விதிமுறைகளை படித்து கவனித்து செயல்பட வேண்டும். நண்பர்களால் ஆதாயம் குறைவு. எனவே
முக்கியமான தகவல்களை உங்களுக்குள்ளேயே வைத்து செயல்பட வேண்டும். தொழில் ரகசியங்களை
யாருக்கும் சொல்லக்கூடாது.
திருமணம்
திருமணத்தடை இருக்கும். இருப்பினும் ஜாதகத்தில்
நல்ல தசா புத்தி நடைபெற்றால் திருமணம் நடக்கும்.
வேலை
அடுத்தவரிடத்தில் செய்யக்கூடிய வேலை ஓரளவு நல்ல
விதமாக இருக்கும் . நான்காம் இடத்தில் சனி இருந்தபோது பல சங்கடங்களை வேலையில்
சந்தித்தீர்கள். இப்போது ஐந்தாம் இடத்து சனியும் சில சங்கடங்களைத் தரும்.
இருப்பினும் முன்பு இருந்ததைப் போல் இப்போது இருக்காது. ஓரளவு நல்ல வருமானம்
கிடைக்கும். ஆனால் நீங்கள் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்
தனுசு ராசி சனி பெயர்ச்சி
பலன்கள் 2025 முதல் 2027 வரை
தனுசு ராசி நேயர்களே ! கும்பத்திலிருந்து
மீனத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதுவரைக்கும் மூன்றாம் இடத்து சனி
உங்களுக்கு 60 சதவீத நன்மைகள் கொடுத்தது. 40 சதவீதம் சில தொந்தரவுகளும் நடந்தது. அடுத்து
நான்காம் இடத்து சனி பெயர்ச்சி ஆகிறது. இது நல்லதா என்றால் நல்லதில்லை. 2025 மார்ச் முதல்
கவனமாக இருக்க வேண்டும். இந்த நிலை 2027 வரை தொடரும் .
அர்த்தாஷ்டம
சனி
நான்காம் இடத்து சனி என்பது அர்த்தாஷ்டம சனி
ஆகும். ஏழரை சனிக்கு நிகரான பலன்களை தரும் . உங்கள் ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக
இருந்தால் சமாளித்து விடலாம். புதிய முயற்சிகளை செய்யும்பொழுது ஜாதகம் பார்த்து
முடிவு செய்யுங்கள். அப்படி செய்யும் பொழுது சில தொந்தரவுகளில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம். வீண் விரயங்களை தவிர்த்துக் கொள்ளலாம். எனவே சுய ஜாதகத்தை
கொடுத்து ஜாதகம் பாருங்கள் .
தொழில்
இதுவரைக்கும் இருந்த தொழில் முறை சற்று
மாறுபடும். புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே திட்டமிட்ட செயல்களை
மட்டும் தொடர்ந்து செய்யுங்கள். தொழிலில் புதிய திட்டங்கள் இந்த காலகட்டத்தில் சரி
வராது . புதிய நண்பர்கள் தொழில் ரீதியான புதிய நண்பர்களை
இப்பொழுது அருகில் சேர்க்க வேண்டாம் . 2027 க்கு பிறகு புதிய முயற்சிகளை தாராளமாக
செய்யலாம் .
வேலை
தற்போது செய்து கொண்டிருக்கும் வேளையில் அதிகம்
கவனம் செலுத்துங்கள் . முன்பு செய்த உழைப்பை விட தற்போது அதிகமாக உழைக்க
வேண்டியிருக்கும். அப்படி உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பேர் சொல்ல மாட்டார்கள்.
இந்த காலகட்டத்தில் சகிப்புத்தன்மை தேவை. யாரிடமும் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து
கொள்ள வேண்டாம். ஏனென்றால் அது உங்களுக்கு எதிராக திரும்பும். முக்கியமான
நம்பிக்கை வாய்ந்த ஒரு நபரை மட்டும் நம்புங்கள். புதிய நண்பர்களை உள்ளே
சேர்க்காதீர்கள்.
திருமணம்
திருமணம் ஆகாதவர்கள் தற்போது அதிகமாக முயற்சி
செய்ய வேண்டும். திருமணம் நடக்கும். ஆனால் சற்று நிதானமாக நடக்கும். உங்கள் சுய
ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால் வெற்றிகரமாக திருமணம் நடக்கும்.
மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
2025
முதல் 2027 வரை
இதுவரை இரண்டாம் இடத்தில் உங்களுக்கு சனி
பகவான் இருந்தார். 2025 மார்ச் பிறகு மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.கடந்த
ஏழரை வருடங்களாக பல இன்னல்களை சந்தித்தீர்கள். போட்டி, பொறாமை, கவலை, கஷ்டம்
அனைத்தையும் சந்தித்தீர்கள். எதை எடுத்தாலும் விரைவாக செய்து முடிக்க முடியாமல்
தவித்தீர்கள். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பம். நினைத்த விஷயங்கள்
நடக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். உறவினர்கள் கை கொடுப்பார்கள். வீடு வண்டி
வாகன யோகம் ஏற்படும்.
திருமணம்
திருமணத்தடை சந்தித்தவர்களுக்கு திருமணம்
கைகூடும். நல்ல வரன் அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நடந்து
கொள்வார்கள். இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். மனக்கசப்புகள் விலகி
ஒற்றுமை ஓங்கும். பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். சுய ஜாதகம் நன்றாக
இருந்தால் இன்னும் சிறப்பு
தொழில்
தொழிலில் இருந்த முடக்கங்கள் விலகும். புதிய
தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் புதிய திட்டங்களை இப்பொழுது
செயல்படுத்த ஆரம்பிக்கலாம். இருப்பினும் சுய ஜாதகத்தை பார்த்து செயல்படுங்கள். தசா
புத்தி நன்றாக இருக்க வேண்டும். ஜாதகம் மிக முக்கியம். தொழில் ரீதியான லாபங்கள்
உயரும். தொழிலாளர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நல்ல உற்பத்தி திறன்
அதிகமாகும். தொழிலில் நல்ல மதிப்பு மரியாதை இப்பொழுது கிடைக்க ஆரம்பிக்கும்.
புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும்
இது நல்ல காலமே. ஆனால் உங்கள் சுய ஜாதகத்தில், சுயமாக தொழில் செய்யும் அமைப்பு இருக்க
வேண்டும். அப்பொழுதுதான் தொழிலில் வெற்றி அடைய முடியும். ஜாதகத்தில் தொழில்
செய்யும் அமைப்பு இல்லை என்றால். நீங்கள் ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம்.
சுயஜாதத்தில் தொழில் அமைப்பு இருக்கும் பட்சத்தில் . நீங்கள் தாராளமாக தொழில்
துவங்க ஆரம்பிக்கலாம். ஜாதகம் பார்த்து செயல்படுங்கள். இது மிக முக்கியம்.
கும்ப ராசி சனி பெயர்ச்சி
பலன்கள் 2025 முதல் 2027 வரை
ஏழரை சனியில் ஐந்து வருடங்களை கடந்து
விட்டீர்கள். இன்னும் இரண்டரை வருடம் கடக்க வேண்டும். இந்த இரண்டரை வருடம்
கடப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அடிமேல் அடி ஏற்பட்டது. நல்ல அனுபவம்
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். அதாவது நல்ல பக்குவம் அடைந்து இருப்பீர்கள். தொழில், திருமணம், வாழ்க்கை
விஷயங்களை புரிந்து கொண்டு இருப்பீர்கள். சனி பகவான் புரிய வைத்து இருக்கிறார். இந்த அனுபவம்
உங்களை நல்ல வழியில் கொண்டு செல்லும். பலரை அனுசரித்து நடப்பீர்கள். இனிமேல்
பலரும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
ஆனால் ஏழரை சனி இன்னும் முழுமையாக முடியவில்லை.
சுப விரயங்கள் ஏற்படும். இந்த செலவானது பிற்காலத்தில் சில ஆதாயங்களை உங்களுக்கு
கொடுக்கும். புதிய இடம் வாங்குவீர்கள். இது சுப செலவு. திருமணத்திற்காக செலவு
செய்வீர்கள். இது சுப செலவு. இதுபோன்று சுப செலவுகள் இப்போது ஏற்படும். இது 2027 வரை தொடரும் . 2027 ஆறாவது மாதம் வரை
தொடரும்.
திருமணம்
கண்டிப்பாக திருமணம் நடக்கும். தாராளமாக
திருமணம் முயற்சி செய்யலாம். பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். இதுதான்
நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமையும்.
அதேசமயம் , உங்கள் ஜாதகத்தில் நல்ல அனுகூலம் இருக்க வேண்டும். வெளியில் அதிகமாக கடன்
வாங்குவதை தவிர்த்து விடுங்கள். இருக்கும் வசதியைக் கொண்டுதான் நீங்கள் செயல்பட
வேண்டும். விரலுக்கு ஏத்த வீக்கம். இதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏனென்றால்
சுபசெலவு தானே என்று அதிகமாக செலவு செய்து விடக்கூடாது.
தொழில்
தொழில் சார்ந்த விஷயத்தில் விரயங்கள் ஏற்படும்.
தேவையான செலவுகளை மட்டும் கவனித்து செய்ய வேண்டும். அகல கால் வைக்கக் கூடாது.
யாரையும் நம்பி பணம் கொடுக்கக் கூடாது. முக்கியமாக தொழில் விஷயத்தில் யாருக்கும்
பணம் கொடுக்காதீர்கள். கடனும் வாங்காதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்
கவனம் தேவை. புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். ஏற்கனவே திட்டமிட்ட செயல்களை தொடர்ந்து
செயல்படுத்துங்கள். இதுவே இப்போதைக்கு போதுமானது ஆகும். உங்கள் புதிய திட்டங்களை 2026 இல்
செயல்படுத்துங்கள். ஆனால் ஜாதகம் பார்த்து செயல்படுங்கள்.
வேலை
ஓரளவு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே செய்து
கொண்டிருக்கும் வேலையும் நல்லவிதமாக நடக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.
புதிய வேலையும் கிடைக்கும். இருப்பினும் ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருக்க
வேண்டும். ஏற்கனவே கிடைத்த வருமானம்தான் கிடைக்கும். வருமானத்திற்கு மீறி வரும்
செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் . வருமானத்திற்கு உட்பட்ட செலவுகளை மட்டுமே
செய்யுங்கள். தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது. இது மிகுந்த மன சுமையை கொடுத்து
விடும். இருக்கும் வசதியைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துங்கள்.
மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை
உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த
சனி பகவான் தற்போது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் .
ஐந்தாம் இடத்தில்
இருந்த சனி பகவான் பூர்வீகம் சார்ந்த சில விஷயங்களில் தொந்தரவு கொடுத்து கொண்டு
வந்தார் . தொழில் வேலை விஷயங்களில் லாபமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் .
உங்கள் ஜென்ம
ராசிக்கு ஆறாம் இடத்திற்கான சனி பெயர்ச்சியானது, நல்ல அனுபவத்தை கொடுக்கும். எந்தெந்த
விஷயங்களில் அனுகூலத்தை கொடுக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
ஜென்ம சனி
2025 மார்ச் முதல் ஜென்ம சனி ஆரம்பம். 2027 ஜூன் வரை இது
தொடரும் . பிறகு விரைய சனி ஆரம்பம். எனவே புதிய திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்.
அதாவது புதிய திட்டங்களை தள்ளிப் போடுங்கள். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும்
விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
தொழில்
புதிதாகத் தொழில் ஆரம்பிக்கக் கூடாது. இன்னும்
ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் ஒருவேளை நல்ல தசாபுத்தி
நடந்தால் ஆரம்பிக்கலாம். ஜாதகத்தைப் பார்த்து புதிய முயற்சிகளை செய்யுங்கள்.
இதனால் வீண் சங்கடங்களை தவிர்க்க முடியும். மீனத்திற்கு இது பெரும் போராட்டக்
காலமாக இருக்கும். நினைத்த விஷயங்கள் உடனே நடக்காது. இதனால் மனச்சோர்வு ஏற்படும்.
தேக ஆரோக்கியம் குறையும். மருத்துவ செலவு ஏற்படும். இருப்பினும் பயப்பட
வேண்டியதில்லை. வீட்டில் பெரியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்
தந்தையின் உடல் நலம் பாதித்து சரியாகும்.
வேலை
வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி
இருக்கும். எவ்வளவு உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன் கிடைக்காது. கவலைப்பட வேண்டாம்.
உங்கள் கடமையை செய்யுங்கள். நல்லதே நடக்கும் என்று செயல்படுங்கள். இந்த
எண்ணங்களால் சில பாதிப்புகளில் இருந்து நீங்கள் விடுபடலாம். ஏழரை சனி முடியும் வரை
கிடைத்த வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.
திருமணம்
திருமணம் நடக்கும். ஆனால் அதிகம் முயற்சி
செய்தால் தான் நடக்கும். திருமணம் தாமதமாக நடக்கும். சுயஜாதகத்தில் தசா புத்தி
நன்றாக இருந்தால் திருமணம் நடக்கும் . ஜாதகம் நன்றாக இருந்தால் தாமதம் ஆனாலும்
நல்லவிதமாக நடக்கும் . குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். தெய்வ
வழிபாடு நன்மை தரும். நிதானமாக செயல்பட வேண்டும். வாழ்க்கை விஷயம் கவனம் தேவை.